Tuesday, November 13, 2012

அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளி எரிப்பு


அநுராதபுரம் மல்வத்து ஓயா அருகிலுள்ள தக்கியாப் பள்ளி வாசல் (மதரசா) இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு தகர்க்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம் பெற்றதுடன் பிரதேச மற்றும் தேசிய அரசியல்வாதிகள் பலரின் கவனம் அநுராதபுர நகரின் மீது விழுந்துள்ளதை கடந்தவார ஊடகச் செய்திகள் சான்று உரைத்துள்ளன.
இதன் புனரமைப்புக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் ரூ. 5 இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளார். இந்நிதி இதன் புனரமைப்புக்கு பயன்படும் ஜூம்மாப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments: