Tuesday, December 4, 2012

வாழும்வரை போராடு

ிிிிிிி  வாழும் வரை போராடு   ிிிிிிி
ிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிி

போராட்டம் தொடங்கி
போகங்கள் நூராயிற்று
போர்வைக்குள் இன்றும்
பூகம்ப அதிர்வுகள்

வாழ்க்கை நிமிடங்கள்
யுகங்களாய்க் கழிந்தது
நிமிட முடிவுளில்
நிசப்தம் வீரிடுகிறது

மௌனிப்புகளின்
மறுபிறவி - என்
போராட்ட வாழ்வின்
தொடக்கப்புள்ளி

கருவறையில்
பிறண்டே இருந்தேனாம்........
பிறக்கும் போதே போராட்டம்
பிறந்த வுடன் பல்கிப்பெருகி........

தாய்ப்பாலே பாதிதான் - எனக்கு
தாயன்பே காணாத பாவி-  நான்
எந்தையோ இல்லை யென்றாகி
வீதிதான் துணைக்கு

காற்றே நிரம்பும் வயிறு
பார்த்தே நிரப்பும் மனது
அடிபட்டு மிதித்தாலும்
அநாதரவு மட்டும் தான்..................

பள்ளி பார்த்தே படித்திட்டேன்
மனக்கணக்கு மதிப்பிட்டேன்
தள்ளுவண்டி நடைபோட்டே
நாகரீகம் பெற்றுவிட்டேன்

கறியோடு சாதம் தான்
ஆடம்பறம் எனக்கன்று
காகிதத்தில் வரைந்து நின்று
வயிறு நிரைய சாப்பிட்டேன்

இராப்பகலா வண்டி
கொண்டு நாற்களையும்
தள்ளியவன் நான்


No comments: