Sunday, January 27, 2013

நான் எனும் அவளால்...........

எனக்குள் வாழும்
நான் இறந்துவிட்டேன்
அவளுள் வாழ்வதாய் நினைத்து

நமக்குள் இருப்பது 
காத லென்ற 
நினைவு ............?
காதல் இருப்பது நமக்குள் அல்ல

அழகின் அழிவு......
இதயத்தின் தாலாட்டு......
இம்சிக்கும் இதயத்துடிப்பு .....
அவள் பிரிந்ததால்

எனக்காய் வாழ 
அவளில்லை
நமக்காய் அழ
நானிங்கே....

காதல் தொட்டில்
காற்றில் ஆடுது
சாதல் கண்டும் 
அதுவும் நனையுது