Sunday, September 29, 2013

நம்பிக்கை துரோகம்










துரோக துயரங்கள்
துச்சம் பலர் நமக்கு
துளசிச் செடி கூட கடன் கொடுத்தும்
துன்பங்கள் எத்தனை

அடுத்த வீட்டு
அன்னையாய் நீ யிருந்தும்
அநாதையாய் நா மிருந்தும் நாம் பட்ட
அவஸ்தைகள் எத்தனை?

எங்கள் கதி யுணர்ந்த
எத்தனை பேருளனர்
எந்தை மட்டுமிருந்தால்.......
எமக்கெதுக்கு நீ...

விழுந்த செல்களில்
விதைந்த தெங்கள் கவலை
விளைச்சல் அமோகமென
விளைகிறது கண்ணீர்....

கொண்டவன்
கொன்றவன்
கோ வெல்லாம்
கோமாளிகள்

துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
எதிர் வீட்டு இனவாதி
செய்ததின்த துரோகம்

அடைக்கலம் தந்திருந்தால்
அனைக்க அன்னை இருந்திருப்பாள்
அவள் ஆத்மா கூட அழுது புலம்பும்
அள்ளி கொடுத்த உதவிகளுக்காய்

காட்டிக் கொடுத்துவிட்டாய்
சாட்டி விட்டுவிட்டாய்
ஏட்டில் பதிந்துவிட்டோம்
நாட்டில் வாழ்வதில்லை யென

போகிறோம்
எங்கோ போகிறோம்
மனிதபிமானமுள்ள
மனிதர்களைத் தேடி....

No comments: