Thursday, September 26, 2013

எனக்கான நான்

எனக்கான நானே
நமக்காக ஆனபோது
எதுக்காக ஏனென
எத்தனபேரு கேட்டதுண்டு

அத்தன கதகளையும்
அடக்கி விட்டு
நான் வந்தேன்
நமக்கான நாமாக

சித்திரைக்கி
வாங்க மச்சான்
கல்யாண கதபேச
முத்திரையாய் தாலிய
தந்து விட்டு போங்க மச்சான்
என்றாயே..


இங்கிலீசு நாகரீகம்
எங்கிருந்து வந்ததிங்கே
நீ வானம் போவென்று
மெல்லியதாய் சொன்னதேனோ

கலியாணக்கனவுகளில்
மிதந்ததோ நானிங்கு
வெளிநாட்டு மாப்பிள்ளை
சென்ஜ கொடுமய பாருங்கோ..

நானென்ன போக்கத்தவானா?
போங்கடி போங்க
பொழுது வரும் எங்களுக்கும்
திரும்பிமட்டும்
வந்துராத

இப்போ
நமக்கான நான்
எனக்கான நானாகி
நகருகிறேன்
தனியாகி

No comments: