Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, November 17, 2014

ஒரு பொழுது விடிகிறது

ஒரு பொழுது விடிகிறது



முகாம்களில் முகம் தெரியா
எம் குடிசைகளின்
வாயில் வழியே
ஒரு பொழுது விடிகிறது

எம் கூரைக்கிழிசல்களுக்குள்
ஆங்காங்கே சிறு வெளிச்சங்கள்
எம் பெண்கள் சேலையிலும்….
அது வெளிச்சமல்ல
ஒரு வரலாற்றின் ஆதாரம்

முக்காடிட்ட முகாம்களுக்குள்
எம் மூதாதையர்கள்
காற்றும் கூட
அங்கு திசை மாறுகிறது…
வெறிச்சோடிப்போன
ஒரு பொழுது……….

அலைக்கழிக்கப்பட்டோம் ஐயா!!
“அகதி” என்ற போர்வையில்……..
அழுகின்றோம் ஐயா!!
ஊர்கள் இல்லாமல்
வியர்வையில்……….

யோகம் வரும் என்பதினால்
மோகம் கொள்ளவேயில்லை
மோகம் கொள்ளவுமில்லை
இங்கு யோகம் வரவுமில்லை

ஒற்றைக் கூரையில்
ஓர் விளக்கு
காற்றும் சுற்றுது
அதையும் அணைக்க

பட்டெரிய நாங்களொன்றும்
பாவிகள் இல்லை
பாவப்பட்டவர்கள்
பரிதவிக்கும் எங்களிடம்
அகோரக் கேள்விகள்

வீழ்ந்த செல்களில்
சிதறியது எம்முயிர் ….
ஆழ்ந்த துயரங்களில்
பதறியது எம்மனம்….
சேர்ந்துகொண்டோம் சோர்வதற்கு

வால் வெள்ளியான வாழ்க்கை…
“வாழ்ந்து கெட்டவர்” என்ற நாமம்
கார்மேகமும்
குண்டு மழை பொழிகிறது…
இரும்புத்தொப்பிகளும்
உலோகப்பறவையின்
குண்டு எச்சங்களும்
சித்திரவதை செய்கிறது

கப்பம் என்ற பெயரில்
கர்ப்பம் தரிக்க வைத்தனர்
அழுகின்ற குழந்தைக்கு
ஒரு “புல்லட்” போதும் என்கின்றனர்

படிக்கப்போனவர்கள்
பள்ளியோடு படுத்துறங்கினர்
மிஞ்சிய உயிர்களெல்லாம்
உதறியோடுகின்றன

அகதி என்ற பெயர் வைத்தே
அதிகாரம் பண்ணுகின்றனர்
ஆத்திரமடைந்தால்
போதும்
ராத்திரிக்குப்போட்டுத்தள்ளுவர்

காத்திரமாய் நானும்  தான்
கண்டதில்லை யாரும் தான்
பாத்திரமாய் இருக்கத் தான்
விட்டதில்லை யுத்தம்  தான்

சோற்றுக்காய் உப்பேதும்
வாங்வில்லை நாமும் தான்
ஒரு கை சோற்றுடன்
துளிக்கண்ணீர் போதுமென்ற
நோக்கம் தான்

பட்டாடை வேண்டுமென்றால்
பத்தாடை வாங்க வேண்டும்
பட்டு மாண்டபின்பெமக்கு
பசிக்க மட்டும் செய்கிறது

“அடுத்தது என்ன?” என்று
நேற்று நினைத்தே இன்றானது
நாளையை நினைக்க என்க்கு
நாழிகை வருமா
என்றானது

இந்தக்காற்றும் எம்பக்கம் வீசும்
போலிருக்கு
கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கை தானிருக்கு
வீண்கோபம் இனி ஏன் எனக்கு
கைகொடுக்க உற்றவர் பேரிருக்கு

ஒருசத சல்லியேனும்
சேர்த்து வைக்க முடியவில்லை
வயது வந்த பாவைக்கு
நல்ல சேதி அருகிலில்லை


இத்தனையும் எம் கண்களில் வந்து
தூங்காத எம் நாட்களாக
ஒரு பொழுது விடிகிறது
ஒவ்வொரு நாளும் அது தொடர்கிறது

தொடர்கின்ற இவ்வலி
நினைத்தே நாம்
செல்கின்ற பாதை மறந்தோம்
வருகின்ற காலத்தினுள்
எம் வாழ்வைத் துறப்போம்

Monday, April 21, 2014

திண்ணம்

வாழ்க்கை முழுவதும் முற்கள்
தைக்கும் கால்களுக்குள்ளும்
இரத்த காவியங்கள்
காதலாய் மலர்ந்தது எனக்குள்

பார்த்ததும் படபட வென
பரிதவித்தது இந்த
பாவி நெஞ்சம்
பார்த்தேன் பாசம் தூவிய
பார்வையாலே

என்னது நியாயம்
பொன்னது போல
பெண்ணது நெஞ்சம் மட்டும் கிடைப்பது
திண்ணம் என்றானதே..................

Monday, September 30, 2013

சிறுவர் தினம்

சிறுவர் தினம்
கொண்டாட அருகதை
இருக்கிறதா நமக்கு?

தலைவா நீ
நினைவாக எடு
இளையான் கூடு
கரைந்த கதையை

இன்றே விழித்திடு
சிதறும் சில்லறைகளாக
கதரும் நம் மவர்கள்
தினம் வேண்டுமா?

அறும்பு மீசையாய்
அகத்தில் அவதிகள்
முளைக்கிறது
இந்த அவனியில்

எத்தனை பிஞ்சுகள்
பிணங்களாக
பிரளயங்கள் நடுவே
நீத்த உயிர்கள்....

தினம் எதற்கு உனக்கு?
கல்வியே காட்டாத நீ
தோல்வியே யளித்த நீ
வேல்வியில் தின மெதற்கு

சிறுவர் தினம் தேவையில்லை
சிந்தையை தூசு தட்டு
பெரியைதை அள்ளி யெடு
உயிரதை திரும்பக் கொடுத்து விடு

யாருக்கிந்த தினம்?
கொன்று குவித்த பிள்ளைக்கா?
காமத்தீ பட்ட பிஞ்சுக்கா?
உங்கள் இன்பங்களுக்கா?

தேவைதானா இந்த தினம்?
நீ மதித்து நட
தோட்டாக்களுக்கும் அதை
சொல்லி நட

நான் என்ன
நீ போலா?
இரத்த சாரலில்
பிஞ்சு மனம் தடவ

நான் என்ன நீ போலா?
வாழவே யுரிமை மறுத்து
பசியிலாழ்த்தி
வாழ்த்துச்  சொல்ல

நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை
நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை

Sunday, September 29, 2013

நம்பிக்கை துரோகம்










துரோக துயரங்கள்
துச்சம் பலர் நமக்கு
துளசிச் செடி கூட கடன் கொடுத்தும்
துன்பங்கள் எத்தனை

அடுத்த வீட்டு
அன்னையாய் நீ யிருந்தும்
அநாதையாய் நா மிருந்தும் நாம் பட்ட
அவஸ்தைகள் எத்தனை?

எங்கள் கதி யுணர்ந்த
எத்தனை பேருளனர்
எந்தை மட்டுமிருந்தால்.......
எமக்கெதுக்கு நீ...

விழுந்த செல்களில்
விதைந்த தெங்கள் கவலை
விளைச்சல் அமோகமென
விளைகிறது கண்ணீர்....

கொண்டவன்
கொன்றவன்
கோ வெல்லாம்
கோமாளிகள்

துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
எதிர் வீட்டு இனவாதி
செய்ததின்த துரோகம்

அடைக்கலம் தந்திருந்தால்
அனைக்க அன்னை இருந்திருப்பாள்
அவள் ஆத்மா கூட அழுது புலம்பும்
அள்ளி கொடுத்த உதவிகளுக்காய்

காட்டிக் கொடுத்துவிட்டாய்
சாட்டி விட்டுவிட்டாய்
ஏட்டில் பதிந்துவிட்டோம்
நாட்டில் வாழ்வதில்லை யென

போகிறோம்
எங்கோ போகிறோம்
மனிதபிமானமுள்ள
மனிதர்களைத் தேடி....

Thursday, September 26, 2013

எனக்கான நான்

எனக்கான நானே
நமக்காக ஆனபோது
எதுக்காக ஏனென
எத்தனபேரு கேட்டதுண்டு

அத்தன கதகளையும்
அடக்கி விட்டு
நான் வந்தேன்
நமக்கான நாமாக

சித்திரைக்கி
வாங்க மச்சான்
கல்யாண கதபேச
முத்திரையாய் தாலிய
தந்து விட்டு போங்க மச்சான்
என்றாயே..


இங்கிலீசு நாகரீகம்
எங்கிருந்து வந்ததிங்கே
நீ வானம் போவென்று
மெல்லியதாய் சொன்னதேனோ

கலியாணக்கனவுகளில்
மிதந்ததோ நானிங்கு
வெளிநாட்டு மாப்பிள்ளை
சென்ஜ கொடுமய பாருங்கோ..

நானென்ன போக்கத்தவானா?
போங்கடி போங்க
பொழுது வரும் எங்களுக்கும்
திரும்பிமட்டும்
வந்துராத

இப்போ
நமக்கான நான்
எனக்கான நானாகி
நகருகிறேன்
தனியாகி

Sunday, May 12, 2013

தாஜ்மகால்...



முகலாயன் விட்டுச்சென்ற 
கடைசி எச்சம்......
மும்தாஜ் இனால் உணரப்படாத
ஸாஜஹானின் இதயம்.....

இமைத் திரைகளுக்குப்பின்னால்
இமைக்காமல் வடித்த 
இன்னொரு காதல் சின்னம் இது

அந்த பளிங்குக் கற்களுக்குள்
உறைந்திருக்கும் உன் இதயத்துடிப்பை
யார் அறிவார் ஸாஜஹா?

உலகம் வியக்கும் 
இந்த பளிங்கு மாளிகை
கைகளுக்குள் அடக்கி
காம வேட்டைக்கான ஆயுதமாக்கியதை 
நீயறியாயோ.....

யமுனையாற்றின்
படுக்கை....
சூரியனின் செம்மொளி- பட்டு
மின்னுது பார் மன்னனின்
மறைமுகைக் கண்ணீர்த்துளிகள்

சிற்பிகள் வடித்தது
மாளிகையல்ல
முகலாயனின் முகத்தில் 
உதிர்ந்த காதலை

உலகமறிந்த உன் காதலை 
உணராமல் இன்னும்
அவள்  கல்லறையில் ...


இது கட்டிடமல்ல
மரணம் எழுதிய
உயிர்ப்பு.....

Sunday, May 5, 2013

நேகம பஸான்: மனிதம் எங்கே?

நேகம பஸான்: மனிதம் எங்கே?: நீ மனிதன் என நான் உணரும் தருணம் மனிதம் தொலைந்துவிட்டது..... இருள் கலைந்து ஒளிபிறக்குமென ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது பு...

மனிதம் எங்கே?



நீ மனிதன் என நான் உணரும் தருணம்
மனிதம் தொலைந்துவிட்டது.....
இருள் கலைந்து ஒளிபிறக்குமென
ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது
புலராமல் மறைந்துவிட்டது....

எத்தனை தலைகள் தலைமைகள்?
அத்துணை விலைகள் அவர்களுக்கு
செத்தனை கொன்றுதான் புகழாரம்  அவர்களுக்கு
இங்கு எத்தனை எத்தனை உதிரமுறைந்திருக்கு

வாள் பேச்சிப் பேசியே நீ
வாய்ப்பூட்டாய் ஆனாய் நீ
தாய் மறைந்த துயரிலே
இன்னும் மீளாமல் ஆனாய் நீ

சவால்கள் விட்டவன் நீ
சாதித்துக் காட்டியவன் நீ
சாகடிக்க நினைத்தபோதும்
சாக்கடை நிதியில் புரழாதவன் நீ

நீ மேதையல்ல ஆனால்
எங்களுக்கு மேலானவன்
பண போதையுமல்ல நீ
பாச மிகு தலைவன் நீ

இன்னொரு அஷ்ரப் ஆனாய் நீ
பின்னொரு காலம் உனக்காய ஆகும் பார்
என்றொரு எண்ணம் உள்ளது எனக்குள்
திண்ணமது என  உள்ளேன் திடமாய் நானும்

ஜனநாயகம் இங்கே மலிந்து விட்டது
தனியாளும் இங்கே உலகாழும் என்னறாகிவிட்டது
தொட்டது தானும் பொன்னாகனும் இங்கே
நாங்கள் நட்டது கூட அழிந்தாகனும் அவர்களுக்கு

ஏழை மழைச்சாரலிலே நனைந்தால் போதுமெமக்கு
பனிமழைப் பந்தலிலே உறங்கனுமாம்     தலைகள்
பார் நாம் வெல்லும் காலம் வரும்
சிந்தும் கண்ணீர் கடலாய் மாறும்

வாழ்த்துகிறேன் சாலியே
திடமாய் இரு
மீதமுள்ள மனிதங்கள்
எப்போதும் உன் கூடவிருக்கும்

                                                                                       -------------நேகம பஸான்-----------------


Sunday, January 27, 2013

நான் எனும் அவளால்...........

எனக்குள் வாழும்
நான் இறந்துவிட்டேன்
அவளுள் வாழ்வதாய் நினைத்து

நமக்குள் இருப்பது 
காத லென்ற 
நினைவு ............?
காதல் இருப்பது நமக்குள் அல்ல

அழகின் அழிவு......
இதயத்தின் தாலாட்டு......
இம்சிக்கும் இதயத்துடிப்பு .....
அவள் பிரிந்ததால்

எனக்காய் வாழ 
அவளில்லை
நமக்காய் அழ
நானிங்கே....

காதல் தொட்டில்
காற்றில் ஆடுது
சாதல் கண்டும் 
அதுவும் நனையுது


Friday, December 14, 2012

முகநூல் தந்த நற்பால்.....














முன் னறியாத
முகங்கள் அது
முகவரி தெரியாத
முதலனுபவ மது.......

கண்களுக்குள்
கைகள் நடக்கும்
இதயத்திலே
இரவுகள் விடியும்

கவலைகளில்
கால்கள் நனையும்
தவிப்புக்களில்
ஆன்மாக்கள் உருகும்

பொழுதுகள்
இருட்டாய் புலரும்
பூக்களும்
காம்பில் மடியும்

அழுது நான்
ஆனந்தம் காண்கின்றேன்
ஆறுதல் தான்
காணாது போகின்றேன்

முதலாய் நானும்
முகநூல் வந்தேன்
வரவேற்பில் தானும்
கவலை மறந்தேன்

உள்ளத்தை திறந்தே
விட்டேன்
ஆறுதல்கள் கோடி
கண்டு

நண்பர்களில் திணித்துப்போனேன்- நான்
எனை மறந்து சிரிக்கலானேன்
கவிதைகளில் மிதக் கண்டேன் - நான்
காகித்தில் எழுதாமலே

நட்புக் கூடம் முகநூல் தந்தது
நானே வியந்தேன் 
எனக்கா என்று............
பாரில் பறித்த பூக்கள் எல்லாம்
தேரில் ஏற்றித்தந்தது முகநூல்

சிரிக்க நானும்
நாளிகை என்றது
நட்புகள் சிரிடா என்றது
வாரி வாரி இதயம் கசிய
நண்பர்கள் தவழக்கண்டேன்

முகநூல் பார்த்தே
நானும் வளர்ந்தேன்
முழுதாய் தானும்
வளர்ந்தே போனேன்

நன்றி சொல்லி
முடிக்க வில்லை
நலமாய் நானும் 
அமைதி கொள்கின்றேன்


Tuesday, December 11, 2012

மூடன் இவன்

மாலைப் பொழுது
மயக்கும் அழகை.....
சேலைக் கிளிகள்
காணக் கூடாதென்றான்....

தாப்பா ளிட்டான்
தாயின் கணவன்
அடித்துச்சொன்னான்
தலை நிமிராதே என்று

உரத்து குரலில்
ஒப்பாரியும் வையாதே.....
சிரத்தைத் தாழ்த்தி
சிந்தை கெட்டு வாழ் என்றான்.....

பசிக்குக் கஞ்சி
பாதி போதுமென்றான்
பாசம் மட்டும் இன்றி
அத்தனையும் பொழிந்தான்

முட்கள் விரிக்கும்  குடைக்குள்ளே
மௌவல் மழை எதிர்பார்த்தாள்
மௌனம் மட்டும் மழையாய்ப்  பொழிய
இவள் தேகம் நனையக் கண்டாள்

சோக நாட்டில்
தனி சாதி இவள்................
கால் கட்டிய
யானை இவள்............

சோலைக் கேசம்
செம்பட்டையாய்......
கீறல் போடும்
முள்ளாய்த் தொடர.........

எழுத்துப் பார்த்தல்
பாவமென்றான்
படித்தல் அது
சாபம் என்றான்

மூலைக்குள் முடங்கச்சொல்லி
பெண் மூளைக்கு விலங்கிட்டான்
அழுகை தேங்கும்
விழிப் பொய்கைக் குள்ளே
குமிழி விடும்  அவளை விற்றான்

ச்சீ....
மூடன் ....
அவள் செய்த தவறேது?
அவன் விழுமியங்கள்
மண்டியிட்டு மரணிக்கட்டும்.....


Sunday, December 9, 2012

கவிஞனுக்கு....

வரலாறு படைத்தவன்
வாழ்விலக்கிய வித்தகன்
இரத்தினம் ஆன
பதியும் அவனே......
மூ பத்து வருடங்கள்
கவியின் நெருடல்களாய்.....
இயக்கிய தமிழ்
இங்கிலாந்தில் மணக்கிறது....
வானில் பட்டம் நூறு
விட்டவன் .................
வாழ்வில் திட்டம் போட்டு
ஜெயித்தவன் ..........
முல்லை மர   பொளியில்
தீபமாய்த் திளைத்தவன்
முக்கியமாய் கூறுகிறேன
இல்லையது முதிர்வுனக்கு.....

Tuesday, December 4, 2012

வாழும்வரை போராடு

ிிிிிிி  வாழும் வரை போராடு   ிிிிிிி
ிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிிி

போராட்டம் தொடங்கி
போகங்கள் நூராயிற்று
போர்வைக்குள் இன்றும்
பூகம்ப அதிர்வுகள்

வாழ்க்கை நிமிடங்கள்
யுகங்களாய்க் கழிந்தது
நிமிட முடிவுளில்
நிசப்தம் வீரிடுகிறது

மௌனிப்புகளின்
மறுபிறவி - என்
போராட்ட வாழ்வின்
தொடக்கப்புள்ளி

கருவறையில்
பிறண்டே இருந்தேனாம்........
பிறக்கும் போதே போராட்டம்
பிறந்த வுடன் பல்கிப்பெருகி........

தாய்ப்பாலே பாதிதான் - எனக்கு
தாயன்பே காணாத பாவி-  நான்
எந்தையோ இல்லை யென்றாகி
வீதிதான் துணைக்கு

காற்றே நிரம்பும் வயிறு
பார்த்தே நிரப்பும் மனது
அடிபட்டு மிதித்தாலும்
அநாதரவு மட்டும் தான்..................

பள்ளி பார்த்தே படித்திட்டேன்
மனக்கணக்கு மதிப்பிட்டேன்
தள்ளுவண்டி நடைபோட்டே
நாகரீகம் பெற்றுவிட்டேன்

கறியோடு சாதம் தான்
ஆடம்பறம் எனக்கன்று
காகிதத்தில் வரைந்து நின்று
வயிறு நிரைய சாப்பிட்டேன்

இராப்பகலா வண்டி
கொண்டு நாற்களையும்
தள்ளியவன் நான்


Sunday, December 2, 2012

துடிக்காமல் நிற்கும் இதயம்

என் மனைவி கண்டு
துடிக்காது நின்றது இதயம்
அவளைக்கண்டு அல்ல
அவனைக்கண்டு

Friday, November 30, 2012

தடுக்காதீர்கள்

நான் போயாகவேண்டும்
----------------------------------

வருந்தி வழியும்- என்
சாகசக் கனவுகள் கல்லில் கரையும் 
மழைத்துளி யமிலங்கள்.......................
மனதை் கரைக்க அனுமதி எதற்கு?

பூக்கள் கண்டு மகிழ்ச்சிதான் -எனக்கு
முற்கள் தைப்பதை மறக்கும் போது
காதல் புணர்ச்சி மயக்கம் தான் -எனக்கு
கண்ணீர் அருவியை மறுக்கும் போது

தரிசான என் மனப்பூமியில் - உன்
கண்ணீர் மழை கண்டு வியந்து விட்டேன்
கண்ணீர் கண்டு அல்ல அதில் சிதையும் 
உன்னைக் கண்டு - என்
கண்களும் சிதையக்கண்டேன்

அவளுக்காய் நான் போராட -அவள் 
எனதானவளில்லை 
லாடம் இடப்பட்டவள்............
வட்டம் வரைந்து வானத்தைப் பார்ப்பவள்..........

அன்று,
அவள் புன்னகை எங்கள் வீதி விளக்குகள்
இன்று, சாராயக் கணவனின் ஏப்ப நெடிகள்

விலங்கிடப்பட்ட இதயத்தோடு அவள்
என் நெஞ்சத்தில் குடிவருவது வழக்கில்லை
கைக்குழந்தை கழுத்தினில்- அவள்
முந்தானை  பிடிக்கும் அடுத்த பிள்ளை
நெருப்பில் வாழ வயிற்றில் ஒன்று

போராட முடியவில்லை
அவளேயிட்ட வரப்புகள் விடவுமில்லை
கனவுகளுக்கு கண்களும் விருப்பமில்லை
தவிடு பொடியான கடந்த காலத்தை நினைத்து

இத்தனையும் கண்டு -நான் 
எப்படி வாழ்வேன்? - நீ 
என்ற எனை நானாக 
மீட்டிக்கொண்டு - நான் போகிறேன்

Sunday, November 25, 2012

மரணம் தின்ற நட்பு


மரணம் தின்ற நட்பு
------------------

மனிதம் மரணித்தது
மனங்களில் நட்பு பிறக்கிறது
தவிப்புகள் தடைகள் ......
நண்பனின் கைகள் தாண்டிகள்........

உறவு நெருடல்களில்
நயக்கிறது நட்பின் நீட்சி
காவிய தணிப்புகளில் நண்பன்
நிம்மதி  மூச்சி

வானத்தின் இறக்கை நட்பு
மேகத்தின் வேகம் நட்பு
தாகத்தின் தணிப்பு நட்பு
இன்னொரு விம்பம் நட்பு

உடலைத்தின்னும் மண்ணிற்கு
உணர்வுகளைச் சீண்ட முடிவதில்லை
உதிரமெங்கும் ஊறிய உனக்கு மரணம்
வந்ததென்று வருத்தமுமில்லை

தாயின் வருடல்கள் முதல் நண்பன்
எந்தையின் முத்தங்கள் அடுத்த நண்பன்
பழகிய உறவுகள் எல்லாமே மொத்த நண்பர்
கடைசியாய் எனக்கு நானே உற்ற நண்பன்

மரணம் தின்ற நட்பு......................
மரணப்படுக்கை சீண்ட
இழக்கிறேன் எனை நானே

Saturday, November 24, 2012

நான் போகிறேன்


தாள்களில் வசனமாகாத
இதயத்தின் தவிப்புக்கள் அது ........
வார்த்தைகள் தடுமாறி உறவுகள்
உதறிய சோதனை அது......

நான் யார் என நானே கேட்கின்றேன்
என்னை மறந்த நானே உன்னை நினைக்கின்றேன்
காதல் எனும் பூஞ்சோலையில்
மல்லிகையும் ரோஜாவும் மனக்கிறது
அடிபட்டு அழியப்போவது தெரியாமல்

அழகிய ரோஜா வனம் இன்று
வரண்ட என் இதயம் போல தரிசானது
தண்ணீர் சிந்தும் பொய்கை நடுவே என்
கண்ணீரும் கசிகிறது.......

தணல் பட்ட புழுவா காதல்?
வேதனை வீடா காதல்?
என் இதயவறைதனில் நரம்புகள் கூட அழுகிறது
நீ வாழ்வதை விட செத்துப்போடா என்கின்றது.......

காதல் என் பாதையை மாற்றியது
காதல் என் வயதைக்குறைத்தது
காதல் வாழ்வைப் புதிதாக்கியது......
இன்று என் உயிரைக்குடிக்கிறது......

நாளை..................................................................
நீ சுவாசித்த காற்றை சுவாசித்து
சுருங்கி விரியும் என்
இதயம் துடிக்கமாட்டாது


நீ வரும் தெருவோரம் நிற்கமாட் டேன்
உன் பதிலைக்கேட்டு தூதேதும் அனுப்பமாட்டேன்
என் பெயர் காற்றாய் மறைந்து போகும்
ஆம் நான் போகிறேன் கண்மணியே

தடையில் பட்ட காற்றைப்போல திரும்பி
என் வாழ்க்கை திறப்பைக்கொண்டு
கவிதை தாள்  கதவைத்திறந்துபார்
எத்தனை சிற்பமாய் நீ அதில் தெரிகிறாய் என்று

நான் என்ற நானை விட நீ என்ற நானாகவே  இருந்தேன்
கனவுகளில் காதல் லயித்துவிட்ட நான்
உன் இன்பமான நினைவுகளை சுமந்து
தனி வழி நிழலாய் உலகம் துறந்து போகிறேன்

நேகம பஸான்

Wednesday, November 21, 2012

காஸாவின் கேட்காத குரல்

காஸாவின் கேட்காத குரல்



கேட்கின்றதா எங்கள் மரண ஓலம்
இதயங்கள் பிளந்து வழியும் இரத்தம்
பாரெங்கும் பரவி வீசுகிறதே
முஸ்லிம்கள் சுவாசத்தினுள்
கலக்கவில்லையா?

சியோனிசப் பயங்கரவாதிகள்
எம் குழந்தைகளைக் கேட்கின்றனர்....
விருட்சமிடும் பிஞ்சுகளின்
என்புகள் சிதறித்துடிக்கின்றது.....

அ.......க்க அராஜகம் முஸ்லிம் நாமத்தின் மேலிருக்க
அட்டூழியம் அவதூறு தான் கொண்டிருக்க
காட்டுமிராண்டியாய் நவீனத்தில் வீட்டிருக்க
உம் சிம்மாசன சொப்பனத்தில் எம் குழந்தைகளா கற்றூண்கள்?

இயந்திரங்கள் குண்டுமழை பொழிகிறது
கொட்டில்களுக்குள் நிசப்தம் கொண்டு
சாக்கடை நீரில் முடமான
முஸ்லிம்கள் பெருமூச்சி விடுகின்றனர்

இருட்டுத்தேங்கிய காஸாவின்
ஆங்காங்கே விழும் மாமிசதின்னிகளின் வெளிச்சங்கள்
அவரகள் வெற்றியின் பக்கமா   நீட்சியாக நிற்கின்றது

பசியில் சுருங்கும் வயிறுகளைப் போல
அந்த பலஸ்தீனம் எல்லை இழக்கிறது
அக்ஸாவின் இருப்புக்காய்
இல்லாதொழிகிறது இன்றைய காஸா

பச்சோந்திப் பார்வை பார்க்கும்
பனியுத்தக்காரர்களே உங்கள் வளங்கொழிந்து
சாக்கடையும் சகதிதடவிய வாழ்வும்
உங்களை சீண்டியே தீரும்

சண்டியன் சூறாவளி அழித்தது போதாதா?
நிபிறு பிரளயம் உங்களைத்தாக்குமடா
இரத்தவெறியர்களே மனிதபிமானமற்ற மக்களே
காஸாவிலும் மனித உயிர்கள் தான் வாழ்கின்றனர்

காஸாவின் குரல் இரத்தங்களுக்குள்
புதையுண்டு குமிழிகளாக வெளிவருகிறது
குரல் காற்றொடு கலந்து போகிறது
கேட்காத குரலாய்

புரட்சி





Gul;rp

Gul;rpfs; ntbj;jd
Nguhir nfhz;ly;y
nghUshir nfhz;NlhUf;F
vjpu; epd;W

NfSq;fs;
nfhd;whYk; jpd;whYk;
Njhw;gPu; vd;whSk;
fhyk; te;jhYk;
vk; neQ;rk;
nty;Nthk;
vd;Nw nrhy;Yk;

mtyg;gpzq;fsha; ehk;..
mfpk;irfisf;
nfhd;w iffspy;
fha;e;Jk; kzf;fpwJ
,uj;jf; fiwfs;

Rthrj;jpd; thrYs;
gbe;j mOf;Ffis
Jk;ky; Jitg;gJ Nghy
vk;kpy; mOf;Fffis
Jitg;gJ ahNuh?

mnkupf;f Mjpf;fk;
fh]htpy; mjpfupf;f
<uhdpd; ike;jd;
fz;zpy; fz;zPu; tUfpwJ
ngz;lfd; jhf;Fjypy;
mOtJ Mg;fhd;
ngz;;fshfpwJ

tha;jpwe;J thu;j;ijfs;
tu kWg;gJ Nghy
gy];jPdg;ngz;zpd;
tapwpy; epd;W
Foe;ijfs; kWf;fpwJ

,jak; gpse;J
,uj;jk; tUfpwJ
ghu;it kq;fp
kaf;fKk; Roy;fpwJ

ntwpnfhz;Lk;
Fwpnfhz;Lk;
eP jhf;FtJ
xd;wha; ,Ue;j
cyfpy; epd;W nfhd;W
cd; rNfhjuidNa

ரோஜா


Nuh[h

tpUl;rk; je;jJ ahu;?
tpijfSf;Fs;
cwq;fpa cdf;F

cd; ,jo; fhz
fhiy khiy
ePu; ,iwj;jtd; ehNd

eP rl;nld kyu;e;J
gl;nld
vidg;ghu;j;J rpwpj;jha;
fyq;fhNj vd;W
fz;zPu; rpe;jpdha;
cd; Kaw;rp
tPzhftpy;iy vd;wha;

ghrj;jpy; gha;e;J jhtpNdd;
ehd; Njhl;lf;fhud;
vd;gij kwe;J

cd;fhk;Gfs; ijj;j Ks;
eP vdf;fpy;iy vd;wJ
mofpa G+Nt
eP vdf;Fr;nrhe;jkpy;iy

Njd;fs; cd;id
Kj;jkplyhk;
ehd; ahU
$sk; nghUf;Fgtd;jhNd


,Nj Njhl;lj;jpy;
vj;jid kyu;;fisf;
fz;Ltpl;Nld;
vd;Wkpy;yhj fyf;fk;
cd;dpy; kl;LNkd;