Monday, September 30, 2013

சிறுவர் தினம்

சிறுவர் தினம்
கொண்டாட அருகதை
இருக்கிறதா நமக்கு?

தலைவா நீ
நினைவாக எடு
இளையான் கூடு
கரைந்த கதையை

இன்றே விழித்திடு
சிதறும் சில்லறைகளாக
கதரும் நம் மவர்கள்
தினம் வேண்டுமா?

அறும்பு மீசையாய்
அகத்தில் அவதிகள்
முளைக்கிறது
இந்த அவனியில்

எத்தனை பிஞ்சுகள்
பிணங்களாக
பிரளயங்கள் நடுவே
நீத்த உயிர்கள்....

தினம் எதற்கு உனக்கு?
கல்வியே காட்டாத நீ
தோல்வியே யளித்த நீ
வேல்வியில் தின மெதற்கு

சிறுவர் தினம் தேவையில்லை
சிந்தையை தூசு தட்டு
பெரியைதை அள்ளி யெடு
உயிரதை திரும்பக் கொடுத்து விடு

யாருக்கிந்த தினம்?
கொன்று குவித்த பிள்ளைக்கா?
காமத்தீ பட்ட பிஞ்சுக்கா?
உங்கள் இன்பங்களுக்கா?

தேவைதானா இந்த தினம்?
நீ மதித்து நட
தோட்டாக்களுக்கும் அதை
சொல்லி நட

நான் என்ன
நீ போலா?
இரத்த சாரலில்
பிஞ்சு மனம் தடவ

நான் என்ன நீ போலா?
வாழவே யுரிமை மறுத்து
பசியிலாழ்த்தி
வாழ்த்துச்  சொல்ல

நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை
நிம்மதியாய் வாழ விடு
தின மொன்றும் தேவையில்லை

Sunday, September 29, 2013

நம்பிக்கை துரோகம்










துரோக துயரங்கள்
துச்சம் பலர் நமக்கு
துளசிச் செடி கூட கடன் கொடுத்தும்
துன்பங்கள் எத்தனை

அடுத்த வீட்டு
அன்னையாய் நீ யிருந்தும்
அநாதையாய் நா மிருந்தும் நாம் பட்ட
அவஸ்தைகள் எத்தனை?

எங்கள் கதி யுணர்ந்த
எத்தனை பேருளனர்
எந்தை மட்டுமிருந்தால்.......
எமக்கெதுக்கு நீ...

விழுந்த செல்களில்
விதைந்த தெங்கள் கவலை
விளைச்சல் அமோகமென
விளைகிறது கண்ணீர்....

கொண்டவன்
கொன்றவன்
கோ வெல்லாம்
கோமாளிகள்

துரோகம்
நம்பிக்கைத் துரோகம்
எதிர் வீட்டு இனவாதி
செய்ததின்த துரோகம்

அடைக்கலம் தந்திருந்தால்
அனைக்க அன்னை இருந்திருப்பாள்
அவள் ஆத்மா கூட அழுது புலம்பும்
அள்ளி கொடுத்த உதவிகளுக்காய்

காட்டிக் கொடுத்துவிட்டாய்
சாட்டி விட்டுவிட்டாய்
ஏட்டில் பதிந்துவிட்டோம்
நாட்டில் வாழ்வதில்லை யென

போகிறோம்
எங்கோ போகிறோம்
மனிதபிமானமுள்ள
மனிதர்களைத் தேடி....

Thursday, September 26, 2013

எனக்கான நான்

எனக்கான நானே
நமக்காக ஆனபோது
எதுக்காக ஏனென
எத்தனபேரு கேட்டதுண்டு

அத்தன கதகளையும்
அடக்கி விட்டு
நான் வந்தேன்
நமக்கான நாமாக

சித்திரைக்கி
வாங்க மச்சான்
கல்யாண கதபேச
முத்திரையாய் தாலிய
தந்து விட்டு போங்க மச்சான்
என்றாயே..


இங்கிலீசு நாகரீகம்
எங்கிருந்து வந்ததிங்கே
நீ வானம் போவென்று
மெல்லியதாய் சொன்னதேனோ

கலியாணக்கனவுகளில்
மிதந்ததோ நானிங்கு
வெளிநாட்டு மாப்பிள்ளை
சென்ஜ கொடுமய பாருங்கோ..

நானென்ன போக்கத்தவானா?
போங்கடி போங்க
பொழுது வரும் எங்களுக்கும்
திரும்பிமட்டும்
வந்துராத

இப்போ
நமக்கான நான்
எனக்கான நானாகி
நகருகிறேன்
தனியாகி

Friday, September 13, 2013

பிரிவு

உன் பிரிவு
நம் காதலுக்கான
முதலீடு என
எண்ணிக்கொண்டு
சேமிக்கிறேன்
கண்ணீரையும்
தவிப்புகளையும்
நீ மீண்டும்
என்னிடம் வரும் வரை................