Friday, December 14, 2012

முகநூல் தந்த நற்பால்.....














முன் னறியாத
முகங்கள் அது
முகவரி தெரியாத
முதலனுபவ மது.......

கண்களுக்குள்
கைகள் நடக்கும்
இதயத்திலே
இரவுகள் விடியும்

கவலைகளில்
கால்கள் நனையும்
தவிப்புக்களில்
ஆன்மாக்கள் உருகும்

பொழுதுகள்
இருட்டாய் புலரும்
பூக்களும்
காம்பில் மடியும்

அழுது நான்
ஆனந்தம் காண்கின்றேன்
ஆறுதல் தான்
காணாது போகின்றேன்

முதலாய் நானும்
முகநூல் வந்தேன்
வரவேற்பில் தானும்
கவலை மறந்தேன்

உள்ளத்தை திறந்தே
விட்டேன்
ஆறுதல்கள் கோடி
கண்டு

நண்பர்களில் திணித்துப்போனேன்- நான்
எனை மறந்து சிரிக்கலானேன்
கவிதைகளில் மிதக் கண்டேன் - நான்
காகித்தில் எழுதாமலே

நட்புக் கூடம் முகநூல் தந்தது
நானே வியந்தேன் 
எனக்கா என்று............
பாரில் பறித்த பூக்கள் எல்லாம்
தேரில் ஏற்றித்தந்தது முகநூல்

சிரிக்க நானும்
நாளிகை என்றது
நட்புகள் சிரிடா என்றது
வாரி வாரி இதயம் கசிய
நண்பர்கள் தவழக்கண்டேன்

முகநூல் பார்த்தே
நானும் வளர்ந்தேன்
முழுதாய் தானும்
வளர்ந்தே போனேன்

நன்றி சொல்லி
முடிக்க வில்லை
நலமாய் நானும் 
அமைதி கொள்கின்றேன்


No comments: