Wednesday, May 29, 2013

காதல் அநாதை

எனக்குள் உருவாகி
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி

நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி

அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது

வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு

ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........

எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....

ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்

நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்

No comments: