Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

Friday, September 13, 2013

பிரிவு

உன் பிரிவு
நம் காதலுக்கான
முதலீடு என
எண்ணிக்கொண்டு
சேமிக்கிறேன்
கண்ணீரையும்
தவிப்புகளையும்
நீ மீண்டும்
என்னிடம் வரும் வரை................

Wednesday, May 29, 2013

காதல் அநாதை

எனக்குள் உருவாகி
நமக்குள் வளர்ந்த காதல்
அநாதையாய் நிற்கிறதே -
காதலி நீ இன்றி

நம் ஸ்பரிசத்தில்
நளிமாய் நிமிர்ந்து
நமக்குள் வளர்ந்த காதல்
நாசமாய்ப் போனதே காதலி

அந்த காதல் கூட
நம்முள் தானே நயநூல்
பெற்றது

வியாக்கியானம்........
விந்தை................
வித்தியாசம் .............
எத்தனை மாற்றம்
நம் காதலுக்கு

ஈகை பொழியும் நாம் காதலை
வைகையாற்றில் கரைத்ததேன்?
நீ நிதர்சனவாதியா?
சாதல் காணச்செய்தவளே
ஹ்ம்ம்ம்.........

எத்தனை
எதுகை மோனைகள்
நம் காதலில்........
மௌன மொழிகள் தான் எத்தனை....

ஏட்டுக் கவிதையாகிவிட்டதடி
நான் பார்த்து
உளிகளால் செதுக்கிய என் காதல்

நானிருந்தும்
இன்று நீயிருந்தும்
நம் காதல் அநாதையாய்
நிற்கின்றது
நம்முள் பாசமற்றதால்

Sunday, May 5, 2013

நேகம பஸான்: மனிதம் எங்கே?

நேகம பஸான்: மனிதம் எங்கே?: நீ மனிதன் என நான் உணரும் தருணம் மனிதம் தொலைந்துவிட்டது..... இருள் கலைந்து ஒளிபிறக்குமென ஏழைக் கண்கள் கரைந்து வழிகிற பொழுது பு...

Thursday, April 25, 2013

வாழ்க்கை

வாழ்க்கையின் யதார்த்தம் யாதாக இருப்பினும் மனிதம் வாழ வேண்டுமானால் மனிதன் இசைவாக்கமடைந்துதான் ஆகவேண்டும்.


Thursday, April 18, 2013

நியாயம்

காதல் செய்ய
அன்பு போதுமாம்?????????????????????????????

கல்யாணம்
பண்ண வீடு, வாகனம்
வேணுமாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதை சொன்னா
மட்டும் மூக்கு செவக்குமாம்..........................
என்னடா நியாயம் இது??????????????????????

Wednesday, April 3, 2013

நாள்

நேற்றைய நாளின்
இன்றை தொடர்ச்சி
இன்னும் ஒரு நாளின்
ஆரம்பம்

Tuesday, March 26, 2013

நான் சிறுபிள்ளை

கவிதைத் தாயின்
மடியில் தவழும் நான்
இன்னும் சிறு
குழந்தை தான்

Saturday, March 9, 2013

கனவுக் காதலி

நான்
கனவுகளை
காதலிக்கின்றேன்


காரணம்
என் கனவுகள்
நிஜத்தை விட
இனிமையானது
என்பதனால்

Friday, March 1, 2013

அமிழும் கண்கள்

கண்ணாடி  வளையல்
காகிதம் தான் பெண்ணே
முன்னாடி நீ நிற்பது
கண்ணாடி தான் கண்ணே

Thursday, December 13, 2012

பாடம்

வாழாதவனுக்கு
வேடிக்கை

வாழ்பவனுக்கு
வாழ்க்கை

Monday, December 10, 2012

தாய்

நீ இல்லாத பல நாளிகை 
கண்கள் நனைந்தே போயின...............
உன்னைப் பிரிந்ததற்காய் அல்ல
அருகில் இருக்கும்போது உன் அன்பைப் 
புரியாமல் இருந்தற்காய்...................

மெழுகு

பிறருக்காய் தன்னை
வருத்தும் தந்தை

Sunday, December 9, 2012

மனைவி


வேலிக்குள் வளரும்
வாசமுள்ள ரோஜா